சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
5.093
திருநாவுக்கரசர்
தேவாரம்
காசனை, கனலை, கதிர் மா பண் - திருக்குறுந்தொகை (பொது -மறக்கிற்பனே திருக்குறுந்தொகை ) Audio: https://www.youtube.com/watch?v=c2WcT__hjhA |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5.093  
காசனை, கனலை, கதிர் மா
பண் - திருக்குறுந்தொகை (திருத்தலம் பொது -மறக்கிற்பனே திருக்குறுந்தொகை ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
காசனை, கனலை, கதிர் மா மணித்- தேசனை, புகழார்-சிலர் தெண்ணர்கள்; மாசினைக் கழித்து ஆட்கொள வல்ல எம் ஈசனை இனி நான் மறக்கிற்பனே? | [1] |
புந்திக்கு(வ்) விளக்குஆய புராணனை, சந்திக்கண் நடம் ஆடும் சதுரனை, அந்திவண்ணனை, ஆர் அழல் மூர்த்தியை, வந்து என் உள்ளம் கொண்டானை, மறப்பனே? | [2] |
ஈசன், ஈசன் என்று என்றும் அரற்றுவன்; ஈசன் தான் என் மனத்தில் பிரிவு இலன்; ஈசன் தன்னையும் என் மனத்துக் கொண்டு(வ்), ஈசன் தன்னையும் யான் மறக்கிற்பனே? | [3] |
ஈசன் என்னை அறிந்தது அறிந்தனன்,- ஈசன் சேவடி ஏற்றப் பெறுதலால்,- ஈசன் சேவடி ஏத்தப் பெற்றேன்; இனி ஈசன் தன்னையும் யான் மறக்கிற்பனே? | [4] |
தேனை, பாலினை, திங்களை, ஞாயிற்றை, வான வெண்மதி சூடிய மைந்தனை, வேனிலானை மெலிவு செய் தீ-அழல்- ஞானமூர்த்தியை, நான் மறக்கிற்பனே? | [5] |
கன்னலை, கரும்பு ஊறிய தேறலை, மின்னனை, மின் அனைய உருவனை, பொன்னனை, மணிக்குன்று பிறங்கிய என்னனை, இனி யான் மறக்கிற்பனே? | [6] |
கரும்பினை, கட்டியை, கந்தமாமலர்ச் சுரும்பினை, சுடர்ச் சோதியுள் சோதியை, அரும்பினில் பெரும்போது கொண்டு, ஆய் மலர் விரும்பும் ஈசனை, நான் மறக்கிற்பனே? | [7] |
துஞ்சும் போதும் சுடர்விடு சோதியை, நெஞ்சுள் நின்று நினைப்பிக்கும் நீதியை, நஞ்சு கண்டத்து அடக்கிய நம்பனை, வஞ்சனேன் இனி யான் மறக்கிற்பனே? | [8] |
புதிய பூவினை, புண்ணிய நாதனை, நிதியை, நீதியை, நித்திலக்குன்றினை, கதியை, கண்டம் கறுத்த கடவுளை, மதியை, மைந்தனை, நான் மறக்கிற்பனே? | [9] |
கருகு கார்முகில் போல்வது ஓர் கண்டனை, உருவம் நோக்கியை, ஊழி முதல்வனை, பருகு பாலனை, பால்மதி சூடியை, மருவும் மைந்தனை, நான் மறக்கிற்பனே? | [10] |